ஜூரோங்கில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த 38 வயதுடைய பெண் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை
ஜாலான் அஹ்மத் இப்ராஹிமை நோக்கி செல்லும் ஜூரோங் டவுன் ஹால் சாலையில் இந்த விபத்து நடந்ததாக @sgaccident Telegram குழுவின் கூறப்பட்டு இருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து இன்று அக்.18 காலை 7:45 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது..
இந்நிலையில், பின்னால் அமர்ந்து பயணித்த அந்த பெண் சம்பவ இடத்தில் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும்,38 வயது ஆடவர் ஒருவர் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி