உலகின் முதல் ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சி, ஜனவரி மாத தொடக்கத்தில்1880 என்னும் தனியார் உறுப்பினர்களின் கிளப்பின் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட அந்த கோழி இறைச்சியை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆசியாவில் முதல் நாடாக சிங்கப்பூர் வந்தடைந்த COVID-19 தடுப்பூசி மருந்து!
இந்த கோழியை தற்போது ரொட்டி, கடி அளவிலான வடிவத்தில் மட்டுமே விற்க சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அனுமதி வழங்கியுள்ளது.
இதனை Eat Justன் சமையல் நிபுணரும், அந்த தயாரிப்பு உருவாக்குநருமான Zachary Tyndall தெரிவித்தார்.
திரு Tyndall, 1880 உடன் இணைந்து அடுத்த மாதம் தனியார் கிளப்பில் வழங்கப்படும் அந்த உணவுகளை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உணவகம், டிசம்பர் 19 முதல் இன்று 22 வரை சுமார் 40 விருந்தினர்களுடன் நான்கு நாள் சோதனையை நடத்தி வருகிறது, அங்கு கோழி இறைச்சி பல சுவையான வடிவில் வழங்கப்படுகிறது.
அடுத்த மாதத்திலிருந்து, Chicken nuggets இரண்டு டிஷ் காம்போவாக விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கோழி மற்றும் waffles ஒரு தட்டிலும் மற்றும் சீன வேகவைத்த ரொட்டியுடன் கோழியும் விற்கப்படும்.
அதன் விலை S$23 என்று 1880 நிறுவனர் மார்க் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
உணவில் கரப்பான் பூச்சி… சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை!