சிங்கப்பூரில் ஜன.,2 முதல் புதிய திருத்த சட்டம்.. மீறினால் S$10,000 வரை அபராதம்

liquor-rules-amendment jan.2 2024

சிங்கப்பூரில் நாளை (ஜன.2) முதல் மது பிரியர்களுக்கு புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வரவுள்ளது.

இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவைகள் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்வது நாளை ஜனவரி 2 முதல் குற்றமாகும்.

சிங்கப்பூரில் 88% வரை தள்ளுபடி விற்பனை.. மெத்தை, சோபா உட்பட 1000 பொருட்கள் – சிறப்பு பரிசுகளும் உண்டு

அதாவது Shopee மற்றும் GrabFood போன்ற மின்னணு வணிக தளங்கள், பொதுமக்கள், வர்த்தகங்கள் உட்பட இணையம் அல்லது தொலைத்தொடர்பு சேவை வழியாக இனி மதுபானம் விநியோகம் செய்ய உரிமம் தேவை.

தொலைத்தொடர்பு சேவைகள் என்பது, தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற இணைய சேவைகளை குறிக்கின்றது.

மது விநியோகம் செய்வோரும் மின்னணு வணிக தளங்களும் மது வாங்கும் நபர்களின் வயதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.

அவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் மதுபானம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

சட்டத்தை மீறினால் என்ன தண்டனையை சந்திரிக்க நேரிடும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

விதிகளை மீறும் நபர்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டம் விநியோகம் செய்வோருக்கும் பொருந்தும்.

உள்துறை அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் காவல்துறை ஆகியவை ஒழுங்குமுறைத் தேவைகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, மது கட்டுப்பாடு (வழங்கல் மற்றும் நுகர்வு) (மதுபான உரிமம்) விதிமுறைகள் 2015 இல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Bricks-and-mortar கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023ன் இறுதி வாரங்களில் குறைந்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் – எங்கே போனார்கள்?