சிங்கப்பூரில் லிஷாவின் மாட்டு பொங்கல்- 2024 கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் திருநாள் குறித்த சிறப்புகளையும், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் லிஷா (Lisha) மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre) பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
இதனை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான நேற்று (ஜன.16) Poli@Clive Street- ல் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மாட்டு பண்ணையில் பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. இதில் லிஷா அமைப்பின் நிர்வாகிகள், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய உடை அணிந்து மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட லிஷா நிர்வாகிகள் மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். அத்துடன் பசு மாடுகளைத் தொட்டு வணங்கியும், அதனுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.