சகோதரியை நாசம் செய்த அண்ணன்.. ஒன்றாக படுக்க அனுமதித்த தாய் – 7 ஆண்டுகள் நடந்த கொடூரம்

indian-origin-singapore-jailed

சிங்கப்பூர்: முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு, 13 வயது சிறுவன் தனது ஐந்து வயது சகோதரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அதனை அறிந்த அவர்களின் தாய், அது பற்றி போலீசில் புகார் அளிக்காமல் கண்டும் காணாதது போல இருந்துள்ளார்.

இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை

மேலும் உடன்பிறந்த அவர்கள் இருவரையும் ஒரே படுக்கையில் தொடர்ந்து ஒன்றாக தூங்கவும் அவர் அனுமதித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது சுமார் 18 வயது இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

தெரிந்தே இதனை அனுமதித்த இரண்டு குற்றச்சாட்டுகளை 45 வயதான அவர்களின் தாயார் ஒப்புக்கொண்டார் என CNA தெரிவித்துள்ளது.

புகார் அளிக்காமல் மறைத்த மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு, வரும் பிப்ரவரி 22, 2024 அன்று தண்டனை வழங்கப்பட உள்ளது.

தற்போது அவர் S$15,000 ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.

குற்றம் செய்த (தற்போது 26 வயதாகும்) அவரின் மகனுக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையும், ஏழு பிரம்படிகளும் 2020 ஜனவரியில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 90 நாட்கள் சிறப்பு விசா – “முய் தாய்” பயிற்சியுடன்..