சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஒளிரும் லிட்டில் இந்தியா – துணைப் பிரதமர் ஹெங் வாழ்த்து..!

Little India lights up Deepavali Heng Swee Keat
(Photo: PremStars)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் நேற்று இந்து சமூகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் பல இன அடிப்படையில் வாழ்ந்து வந்தாலும் இந்த முக்கியமான பண்டிகைகளை அவர்கள் ஒன்றாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மொத்தம் 444 முதலாளிகளுக்கு S$10 மில்லியன் தொகை மறுப்பு..!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு, தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அலங்கார மயில்கள், அலங்கார தாமரை பூக்கள் மற்றும் அலங்கார விளக்குகள் போன்றவற்றைக் காணலாம்.

இந்த நெருக்கடியின் மத்தியில், தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான பாதையில் சிங்கப்பூர் இருந்துவரும் இந்த சூழலில், ஒளிரும் நம்பிக்கையின் ஒரு விளக்காக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Photo: PremStars)

தொற்று காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்களை குறைத்திருந்தாலும், பண்டிகை உணர்வு பிரகாசமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றாக கொண்டாடும் பட்சத்தில், இந்த கடினமான காலங்களில் சிங்கப்பூரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இந்த விழாக்கள் உதவும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு காவல்துறை விருது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…