உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி செல்ல காஸ்வேயில் வரிசையில் நின்று கொண்டிருந்த பல கார்கள் மீது லாரி மோதியது.
இந்த சம்பவம் இன்று ஜூலை 7, வியாழன் காலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது. லாரி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்த முடியாமல், பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதை வீடியோ வாயிலாக காண முடிகிறது.
சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை
சமூக ஊடகங்களின் வழியே வெளியான வீடியோக்கள் மூலம், காஸ்வேயில் ஏற்பட்ட இந்த விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்களின் அளவைக் காணமுடிந்தது.
இதனை அடுத்து, காலை 10:25 மணிக்கு, காஸ்வேயில் உள்ள மூன்று பாதைகளில் இரண்டு பாதைகளுக்கு தடை போடப்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கூறியது.
அதன் பின்னர் காலை 11:15 மணிக்கு, மூன்று பாதைகளில் ஒன்றுக்கு மட்டுமே தடை போடப்பட்டதாக ICA கூறியது.
இறுதியாக மதியம் 12 மணிக்கு வெளியான ஃபேஸ்புக் புதுப்பிப்பில், அனைத்து பாதைகளும் சரிசெய்யப்பட்டகாக ICA அறிவித்தது.