சிங்கப்பூர்: மோட்டார் சைக்கிள், லாரி மற்றும் பேருந்து சம்மந்தப்பட்ட விபத்தில் 26 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை (மே 25) காலை 7.40 மணியளவில் விக்டோரியா ஸ்ட்ரீட் மற்றும் பிராஸ் பாஷா சாலை சந்திப்பில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) காவல்துறையும் தெரிவித்தனர்.
மீண்டும் ராட்சத உடும்பு நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம் – பாதுகாப்புடன் இருக்க என்ன செய்வது?
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் SCDF தெரிவித்துள்ளது.
31 வயதான லாரி ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்