பாசிர் ரிஸில் நடந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

Photo: Singapore roads accident.com/FB

பாசிர் ரிஸில் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) நடந்த வாகன விபத்தில் 58 வயதான லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

இந்த விபத்து பாசிர் ரிஸ் டிரைவ் 10, பிளாக் 645 அருகில், இரவு 8.25 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு

லாரியை நடைபாதையின் மேலே நின்றுகொண்டு இருப்பதை, விபத்து நடந்த இடத்தின் புகைப்படம் மூலம் காண முடிகிறது.

பின்னர் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Photo: Singapore roads accident.com/FB

பின்னர் அவர் உயிரிழந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாலையில் லாரியை கவனமாக ஓட்டினால் பல்வேறு விபத்துகளை தவிர்க்கலாம் – காணொளி