பெரிய மரத்துண்டுடன் கவிழ்ந்த லாரி.. பேருந்தில் மோதி விபத்து – பதறிய ஊழியர்கள்.. மூவர் காயம்

lorry-tree-trunk-rolls-over
Shin Min Daily News

வெட்டிய பெரிய மரத்துண்டை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து, தனியார் பேருந்து மீது மோதியது.

இதனால் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் காயமடைந்தனர் என ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

இந்த விபத்து நேற்று நவ.28 ஆம் தேதி காலை யுஷுன் அவென்யூ 7 இல் நடந்ததாக அது கூறியுள்ளது.

பெரிய மரத்துண்டு தாக்கியதில் சம்பவ இடத்தில் அதிக அளவில் ரத்தம் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த ஊழியர்கள் கூறுகையில், லாரி சமநிலை கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தை அடுத்து, இரண்டு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,

மற்றொருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதன் ஓட்டுநர் ஷின் மினுக்கு தெரிவித்தார்.

லாரி ஓட்டுனரும் தற்போது நன்றாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்