இந்தியாவின் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் (Air India Express).
அந்த வகையில், மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் விமான சேவையை வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் பிரதமரை நேரில் சந்தித்த பனாமா வெளியுறவுத்துறை அமைச்சர்!
இந்த நிலையில், மதுரை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.