முகத்தில் எச்சில் துப்பிய முதலாளி… கடுப்பில் கத்தியால் தாக்கி உயிரை எடுத்த பணிப்பெண் – 16 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
Photo: Freepil

95 வயதுமிக்க முதலாளி தன்னுடைய முகத்தில் எச்சில் துப்பியதால் கோபமடைந்த வீட்டுப் பணிப்பெண், முதலாளிக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அதனை அடுத்து சமையல் அறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை சரமாரியாக குத்தியுள்ளார் மியான்மர் நாட்டைச் சேர்ந்த அந்த பணிப்பெண்.

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்… தகாத காட்சிகளை பார்த்துகொண்டே தவறாக நடந்த நபர்

முதலாளியின் வாய் மற்றும் கழுத்தில் கத்தி குத்துகள் பாய்ந்ததாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36 வயது என்று அடையாள ஆவணங்கள் கூறும் சந்தர் டூ என்ற அந்த பணிப்பெண்ணுக்கு இன்று (நவம்பர் 15) 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

செராங்கூனில் உள்ள முதலாளி ஆங் பெக் சாய் வீட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சந்தர் வேலை செய்யத் தொடங்கினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பரிந்துரை