பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்… தகாத காட்சிகளை பார்த்துகொண்டே தவறாக நடந்த நபர்

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

சிங்கப்பூரில் 21 வயது இளைஞன் ஒருவர் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கு முன்னதாக ஆபாசப் படங்களை பார்த்ததாகவும், அதன் பின்னர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பரிந்துரை

அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றபோது சட்டவிரோத வீடியோக்களை எடுக்க பெண்கள் கழிப்பறைக்குள் அத்துமீறி நுழைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தற்போது 23 வயதாகும் ஆங் ஜி யூ, பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், தவறான நடத்தை ஆகிய குற்றச்சாட்டுகளை திங்களன்று (நவம்பர் 14) ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் மீது உள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது பரிசீலிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

சலீம் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்த வீரமுத்து: சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சிறையில் அடைத்த போலீஸ்