மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சிங்கப்பூர், மலேசிய மற்றும் துபாய் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உதவும் வகையில் சுமார் 15,000 உணவு பெட்டிகள் இம்மாதத்தில் விநியோகித்ததுள்ளதாக கூறியுள்ளது.
COVID -19 நெருக்கடியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள், அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிச்செய்வதற்கு முன்வந்து செயல்படுவதாக மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் திரு ஷாம்லால் முஹம்மத் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சவரக்கருவி வாங்க சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு அபராதம்..!
இத்திட்டத்திற்கு சுமார் $6,15,000 செலவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த உணவு பெட்டிக்குள் கெட்டுப்போகாத, ஒரு மதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிருக்கும் என்று கூறப்படுகிறது.
இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு சமூகமாக ஒருவருக்கொருவர் ஆதரவாக உதவிக்கரம் நீட்டலாம் என்று திரு ஷாம்லால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!