மலேசியாவில் உடல்நிலை பாதிப்பு….கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ள தமிழக இளைஞர்!

மலேசியாவில் உடல்நிலை பாதிப்பு....கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ள தமிழக இளைஞர்!
Video Crop Image

 

மலேசியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் உடல்நிலை சரியில்லாததால் தன்னை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியதைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் குமார் கண்ணீர் மல்க பேசி, வீடியோவை வெளியிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

இது தொடர்பாக, மலேசியாவில் உள்ள இளைஞர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “தாய் உள்ளதோடு தன்னைக் காப்பாற்றி தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; உங்களை தான் நம்பியிருக்கிறேன்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி 2024!’

அதேபோல், தனது மகனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் பிரவீன் குமாரின் பெற்றோரும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பிரவீன் குமாரின் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.