சம்பளமின்றி தவிக்கும் 14 தமிழக ஊழியர்கள்: கைவிரித்த கட்டுமான நிறுவனம்… சொந்த ஊர் திரும்ப வழியை தேடும் சோகம்

maldives workers suffering salary issues

தமிழக ஊழியர்கள் 14 பேருக்கு சம்பளம் கொடுக்காமல் கட்டுமான நிறுவனம் ஒன்று 3 மாதங்களாக அலைக்கழித்து வருகிறது.

மாலத்தீவு ஹுலு மாலியில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சுமார் 17 ஊழியர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் ஆங்கிலம் பேசத் தெரியாததற்காக சிறுவன் கொடுமை… போலீசில் புகார் செய்த தாய்

அந்த நிறுவனம் 17 ஊழியர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அதில் 14 பேர் தமிழக ஊழியர்கள், மூவர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தற்போது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் சம்பளத்தை கொடுக்க முடியவில்லை என்றும் அது கூறியுள்ளது.

மனமுடைந்த ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்பி வர உள்ளதாகவும், அவர்களுக்கு இந்திய தூதரகம் உதவிகளை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேன் தானாக சறுக்கி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக பலி