பேருந்து, லாரியுடன் விபத்து.. சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

male-dies-lorry-bus accident lentor
Facebook

சிங்கப்பூர்: பேருந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 19 வயது ஆடவர் இறந்தார்.

நேற்று பிப்ரவரி 2, பிற்பகல் 1:40 மணியளவில் Yio Chu Kang நோக்கி செல்லும் லெண்டர் அவெனியூவில் நடந்த இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

அத்தகவல் அறிந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சோதனை செய்தார்.

ஆனால், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்து துணை மருத்துவர் அறிவித்தார்.

35 வயதான லாரி ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!