தனது மகளையே பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூரர்.. 13 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள் விதிப்பு

Capital punishment in Singapore is a legal penalty

தனது மகளை பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூர் ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 16 பிரம்படிகளும் நேற்று (ஜன.29) விதிக்கப்பட்டன.

38 வயதான அவர், தனது மகளுக்கு நான்கு முதல் ஐந்து வயது இருக்கும்போது மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது.

3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

மேலும், சிறுமிக்கு 11 வயது இருக்கும் போது அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

அவருடைய மகளுக்கு தற்போது 15 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் விதமாக குற்றாவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

2013 இல் மழலையர் பள்ளியில் படிக்கும்போதே சிறுமியை பாலியல் நாசம் செய்ய அவர் முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

தன் தந்தை செய்வது தவறு என்பது 5 ஆம் வகுப்பு படிக்கும்போது பாடம் வழியாக சிறுமிக்கு தெரியவந்துள்ளது.

ஆனால், அச்சத்தின் காரணமாக சிறுமி அதனை நண்பர்களிடம் கூட சொல்லாமல் இருந்துள்ளார்.

2022 இல், சிறுமிக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் சிறுமியின் முன்கையில் வெட்டு காயங்களை கண்ட பின்னர் இந்த கொடூர தொடர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?