ஆயுதத்துடன் தன்னை தானே பூட்டிக்கொண்ட ஆடவர் மனநல சட்டத்தின்கீழ் கைது

Man apprehended arming himself knife
Photo: Stomp

பிளாக் 130 புக்கிட் மேரா வியூவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 16) கத்தி ஏந்திய 65 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அன்று மாலை 4.05 மணி அளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளினிக் ஒன்றை உடைத்து உள்ளே நுழைந்து இருமல் மருந்தை திருடிய சந்தேகத்தில் ஆடவர் கைது

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, ​​65 வயதான ஆடவர் ஒருவர் கத்தியுடன், வீடு ஒன்றில் தன்னைப் பூட்டிக் கொண்டார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர், மாலை 5.40 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அதன் பின்னர், அந்த ஆடவர் மனநலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதில் யாருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கலாமே? என்ற கேள்விக்கு மனிதவள அமைச்சத்தின் பதில்