யூனோஸ் பகுதியில் உள்ள மசூதியின் உள் புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 ஜாலான் இஸ்மாயிலில் அமைந்துள்ள மசூதியின் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து நேற்று மே 15 அதிகாலை 2:40 மணியளவில் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
அதாவது, அங்கு வைக்கப்பட்டு இருந்து நன்கொடை பெட்டிகளில் இருந்த பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ… Fan boy வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிஷ்டம்
பின்னர் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்த போலீசார், புகார் கிடைத்த மூன்று மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.
அந்த ஆடவர் மீது இன்று மே 16-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.