தவறான முறையில் பெண்ணை புகைப்படம் எடுத்ததன் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 15ம் தேதி மாலை 5.45 மணியளவில், ஸ்வானேஜ் (Swanage) ரோட்டில் பொது பேருந்து ஒன்றில் சென்றபோது, தவறான முறையில் பெண் பயணியின் புகைப்படத்தை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 257 பேர் பாதிப்பு – வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதி..!
இதனை தொடர்ந்து விசாரணைகள் மூலம், பெடோக் காவல் பிரிவு அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளம் கண்டு ஜூலை 17 அன்று கைது செய்தனர்.
மேலும், புகைப்படம் எடுக்க அந்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரண்டு கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது கலவையாகவும் வழங்கப்படலாம்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இணையத்தில் பகிரப்பட்ட நாய் துன்புறுத்தும் காணொளி – விசாரணை நடைபெறுகிறது..!