சண்டையின் போது கத்தியை சுழற்றி அச்சுறுத்திய ஆடவர் – கைது செய்த போலீஸ்!

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

சண்டையின் போது மற்றொரு நபரை நோக்கி கத்தியை சுழற்றி அச்சுறுத்தியதாக கூறப்படும் 77 வயது முதியவர் புதன்கிழமை (மார்ச் 16) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை, 29 பெண்டிமீர் சாலையில் மாலை 6.55 மணியளவில் இரு ஆடவர்களுக்கிடையிலான சண்டை குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் குவிந்தன.

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!

அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருந்ததாகக் சொல்லப்படுகிறது, போலீஸ் அதிகாரிகள் வருவதற்கு முன்பே இரண்டு பேரும் அந்த இடத்தை விட்டுச் எஸ்கேப் ஆனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் 77 வயதான ஆடவர் சண்டையின் போது மற்றவர் மீது கத்தியை சுழற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ஆனால் அது யாரையும் தாக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், 77 வயதான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்திருந்ததாக இன்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்படும்.

மிரட்டல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!