கிளப்பில் இருந்த பெண்களை தொட்டு சீண்டியதாக இளைஞர் கைது (Video)

man arrested at club for misbehave to women

மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள கிளப்பில் இருந்த பெண்களை சீண்டியதாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த மாதம் அக்.24 அன்று நள்ளிரவு 2:30 மணியளவில் Cecil ஸ்ட்ரீட்டில் உள்ள கிளப்பில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிநவீன புதிய தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையம்: நவ.27 திறப்பு – சிறப்பு அம்சங்கள் என்ன?

இதனை அடுத்து அந்த இளைஞர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வீடியோ @adminsgfollows இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

இளைஞர் இரவு விடுதிக்குள் உலா வந்ததாகவும், உள்ளே இருக்கும் பெண்களைத் தொட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தனது செயல்களைத் தொடர்ந்து செய்தார் என்றும், மேலும் அவர் போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இவர்களுக்கு சம்பள உயர்வு – ஜன.1 முதல் அமல்