சிங்கப்பூர் பேலஸ்டியர் (Balestier) சாலையில், 27 வயதுமிக்க ஆடவர் ஒருவர் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்திற்காக நேற்று (ஜூன் 20) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து, சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், அந்த நபர் முரண்டு பிடிப்பது தெரிகிறது. சில அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். பின்னர், அந்த நபர் அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
வியட்நாம் சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!
230, பேலஸ்டியர் சாலையில் நேற்று அதிகாலை நடந்த தகராறு குறித்து தகவல் அறிந்த பிறகு, அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுமிக்க அந்த ஆடவர், குடிபோதையில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியது, பொது ஊழியரிடம் தகாத வார்த்தைகளைப் பேசியது, பொது ஊழியரை தனது கடமையை செய்யவிடாமல் தடுத்ததது ஆகிய காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (ஜூன் 21) கூறியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ரெட்ஹில் வட்டாரத்தின் இந்த பிளாக்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!