குவீன்ஸ்வேயை நோக்கி செல்லும் ஃபோரர் சாலையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் சோதனையில் இருந்தபோது, மோட்டார் வாகனத்தில் வந்த ஆடவர் ஒருவரை நிற்குமாறு சைகை காட்டியும் அவர் நிற்காமல் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
வாகனத்தை நிறுத்தாமல் சென்ற 21 வயது ஆடவரை அதிகாரிகள் பின்தொடர்ந்து சுமார் 4.5 கி.மீ தூரம் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாட்டுடன் பயணத்தை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஆய்வு!
பின்னர் சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி வாகனம் நின்றதாகவும், அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிக்க முயன்றதாகவும் டோவர் ரைஸ் சாலையை கடந்து சென்ற ஜோர்ஜ் என்பவர் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற ஆடவர் டோவர் கிரெசண்ட பகுதியில் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார், இந்த சம்பவமானது கடந்த செவ்வாய் கிழமை இரவு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் மற்றும் போதைபொருள் சம்பந்தமான குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பெயரில் அவரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.