நியூ அப்பர் சாங்கி சாலையில் நேற்று முன்தினம் கார் மோதியதில் 71 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அன்று இரவு 8.05 மணியளவில் நியூ அப்பர் சாங்கி சாலையில், சாங்கி சாலையை நோக்கி சென்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?
இதில் அந்த கார் சைக்கிள் ஓட்டுனரை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மயக்க நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அவரின் பின்னால் அமர்ந்துவந்த 69 வயதான பெண் பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து, ஓட்டுநர் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வேலையிடத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு இரு வகையான வேலைமுறைகள் வலியுறுத்தல்!