சிங்கப்பூரின் கேலாங் சாலையில் உள்ள கடைக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பெயரில், 26 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேலாங் சாலையில் உள்ள அந்த கடையில் ஒரு சிகரெட் பெட்டி மற்றும் 2,000 வெள்ளி ரொக்கம் ஆகியவை திருட்டு போனாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 23) இரவு தகவல் அளிக்கப்பட்டது.
பாலியல் சேவைகள் வழங்கிய சந்தேகத்தில் 9 பெண்கள் கைது – ஆறு பேரின் வருகை அனுமதி ரத்து
இதையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 26 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 960 வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று (ஜூலை 26) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
பிடோக் காவல்துறை பிரிவினர் நடத்திய விசாரணை மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
மேலும், இந்த மாதம் 21ம் தேதியன்று கேலாங் சாலையில் இடம்பெற்ற வேறு இரண்டு திருட்டு சம்பவங்களிலும் அவருக்குச் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மலேசியாவிலிருந்து பூனைக்குட்டிகளை பேண்ட் பாக்கட்டில் வைத்து கடத்தியவருக்கு சிறை