பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… கையில் சுத்தியல், பேனாக் கத்தியுடன் கைது!

Singapore Police Force

பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக 47 வயதுடைய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல், கிம் மோ லிங்கில் உள்ள பிளாக்கின் லிப்டில் அந்த பெண் அடையாளம் தெரியாத ஆடவரால் பாலியல் ரீதியாக சீண்டப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஹௌகாங் காபி கடையில் 15 பேர் பெரும் சண்டை: உலோகக் கம்பி..உடைந்த நாற்காலிகள் – மருத்துவமனையில் ஒருவர்

கேமராக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையை மேற்கொண்ட பின்னர், அதே நாளில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் சுத்தியல் மற்றும் பேனா கத்தி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) செய்தி வெளியீட்டில் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் அன்று தெலோக் பிளாங்கா கிரசென்ட்டில் நடந்த இதேபோன்ற மற்றொரு சம்பவத்திற்கும் அந்த ஆடவர் தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்திற்கு மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் Work permit அனுமதி பெற்ற CMP வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி நீட்டிப்பு!