தாயை கீழே தள்ளி உதைத்து, துடைப்ப கட்டையால் தாக்கிய மகன் – சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு

man-2500-fine-obscene-act-overhead-bridge
(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

தனது 67 வயதான தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை அடித்து தாக்கிய மகனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகனின் அந்த தாக்குதலுக்குப் பிறகு சுமார் 20 நாட்கள் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என கூறப்பட்டுள்ளது.

தற்போது 44 வயதாகும் மஹ்கந்திரன் நராஹ்ஜா என்ற அந்த மகன் கடந்த ஆண்டு ஜூன் 9, அன்று தனது தாயை கீழே தள்ளி துடைப்பக் குச்சியைப் பயன்படுத்தி தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

ரோட்டில் அடித்துக்கொண்டு உருண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 4 பேர் கைது: “மானத்தை வாங்காதீங்க பா” – சக ஊழியர்கள் காட்டம் (வீடியோ)

அதனை அடுத்து தடுமாறி எழுந்த தன் தாயை, விடாமல் அவரின் வயிற்றில் உதைந்து தாக்கினார் மஹ்கந்திரன், இதனால் அவர் மீண்டும் தரையில் விழுந்தார்.

இந்நிலையில் அவர் தனது தாய் மற்றும் அவரது மனைவி இருவரையும் தாக்கிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் செவ்வாயன்று, ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி… அடுத்த ஆண்டு முதல் புதிய நடைமுறைகள் எதிர்பார்ப்பு