லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம் கண்டெடுப்பு..!

man death Little India restaurant
A man body found in Little India restaurant (PHOTO: Anjappar Chettinad Restaurant / Google Maps)

சிங்கப்பூர், லிட்டில் இந்தியாவில் இன்று நவம்பர் 3ஆம் தேதி காலை, உணவகம் ஒன்றில் ஒருவர் சடலமாக இறந்து கிடந்தார்.

Mothershipஇன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, காலை 10:32 மணிக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் (Race Course Road) உள்ள ஒரு பிரிவில் இருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் TraceTogether மூலம் சுமார் 25,000 பேர் அடையாளம்.

49 வயதான அந்த ஆடவர், சம்பவ இடத்தில் அசைவில்லாமல் கிடந்தார் என்றும், துணை மருத்துவரால் அவர் அங்கேயே இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் சமையலறை பகுதியில் அந்த ஆடவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக “ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

ஆடவரின் மேல் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காயங்கள் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில், இதில் சதிச்செயல் ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல கூடுதல் விமானங்கள்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…