மெரினா பே சாண்ட்ஸில் இருந்து கீழே விழுந்த ஆடவர்.. சம்பவ இடத்திலேயே மரணம்

Marina Bay Sands
Pic: File/Reuters

மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலின் கீழே 63 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஹோட்டலில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் அதிரடி சோதனை: தகாத சேவை வழங்கிய பெண்கள், சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் கைது

நேற்று (மார்ச் 11) இரவு 7:50 மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை MBS செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, சிங்கப்பூர் காவல்துறைக்கு அதே நாள் மாலை சுமார் 7:55 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் வந்ததாக கூறியது.

தரையில் மயக்க நிலையில் கிடந்த அவரை சோதித்த SPF அதிகாரிகள், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், போலீசார் சதிச் செயல்கள் குறித்து ஏதும் சந்தேகிக்கவில்லை என கூறியுள்ளனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்