கிளெமென்டி பகுதியில் உயரத்தில் இருந்து விழுந்ததில் 18 வயது இளையர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மே 23 அன்று மாலை சுமார் 4:16 மணியளவில் இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை 8World Newsயிடம் தெரிவித்தது.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிளாக் 441B கிளெமென்டி அவென்யூ 3ல் 18 வயது இளையர் ஒருவர் தரையில் அசையாமல் கிடந்ததை கண்டனர்.
அதனை அடுத்து அந்த இளையர் இறந்தது, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவப் பணியாளர்களால் உறுதி செய்யப்பட்டது.
இந்த மரணத்தில் சதிச்செயல் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.