பிராடெல் பகுதியில் இறந்து கிடந்த ஆடவர் – போலீஸ் விசாரணை

67-year-old man found dead in Braddell flat

பிராடெல் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் 67 வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ​​மாலை 4.10 மணியளவில் பிளாக் 10R பிராடெல் ஹில்லில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்

அதிகாரிகள் சென்று பார்த்தபோது, வீட்டில் அந்த ஆடவர் அசையாமல் கிடந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவர் சோதித்தபோது அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தீபாவளி இரவில் ஏற்பட்ட சண்டை.. ஆடவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதி – ஒருவர் கைது