பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

கடந்த 2019 ஆம் ஆண்டு தன் வீட்டில் பணிபுரிந்த 25 வயது நிரம்பிய இந்தோனிசியா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லைக் கொடுத்த 68 வயதான ஆடவருக்கு 12 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் செய்த இவர் 50 வயதை தாண்டியிருப்பதால், இவருக்கு பிரம்படி தண்டனைக் கொடுக்க இயலாதென்று நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரில் பணிப்பெண்களின் தேவை அதிகரிப்பு – முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்!

பணிப்பெண்ணிற்கு பாலியல் தொல்லைக் கொடுத்து காயம் ஏற்படுத்திய இவருக்கு ஏற்கனவே ஆண்மைக் குறைபாடு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் குடும்பத்தினருக்காக வேலை செய்வதற்காக சேர்க்கப்பட்ட அப்பணிப்பெண்ணிடம், வேலைக்குச் சேர்ந்த ஒருமாதத்திலேயே பாலியல் தொல்லைகளைச் செய்துள்ளார் இவர்.

பாதிக்கப்பட்ட அப்பணிப்பெண், 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்திலேயே வேறு ஒரு பணிப்பெண்ணிடம் உதவிக்கேட்டு சென்றுள்ளார். அப்பெண்ணின் மூலம் பாதிக்கப்பட்ட பெண், பணிப்பெண்களுக்கான சேவை மையத்திற்கு சென்று புகார் செய்துள்ளார்.

போலிஸிடம் இப்புகார் சென்றதிற்கு பிறகு, பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அந்த 68 வயது ஆடவரின் மீது சுமத்தப்பட்ட இப்பாலியல் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால், நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டு 6 மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது…