சிங்கப்பூரில் 51 வயதுமிக்க ஆடவரை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 39 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (ஜூலை 15) தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு 12.55 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 3இல் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது என ஊடக வெளியீட்டில் அது தெரிவித்துள்ளது.
அதிக ஊதியம் தருவதாக கூறியும், வேலைக்கு வர ஊழியர்கள் இல்லை!
சம்பவ இடத்தில், பல காயங்களுடன் ஆண் மற்றும் பெண் இருவர் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் சுயநினைவுடன் இருந்தனர், ஆனால் ஆடவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார்.
“அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முன்பு தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.”
தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளார், மேலும் அவர் மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் கொலை வழக்கு குறித்து குற்றம் சாட்டப்படும்.
கொலை குற்றம் நிரூபணம் ஆனால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.