போலீஸ் வாகனத்தின் முன் டயரில் தலைகுப்புற தவறி விழுந்த ஆடவர்

man-nosedives-police-vehicle Clarke Quay

கிளார்க் கீயில் விடுமுறை நாட்களில் குறிப்பாக சனிக்கிழமை இரவு நேரங்களில் சிலர் குடித்துவிட்டு செல்வது வழக்கம் தான்.

இந்நிலையில், ஆடவர் ஒருவர் படியை கவனிக்காமல் சென்று தடுமாறி சாலையில் நின்றுகொண்டிருக்கும் போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தில் விழும் காட்சி நேற்று (அக்.21) டிக்டாக்கில் வெளியிடப்பட்டது.

தடை இருந்தும் பதாகையை ஏந்திய ஆடவர் – போலீஸ் விசாரணை

இதனை அடுத்து, அருகில் வேறு சம்பவத்தை விசாரித்துக்கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்ற அந்த நபருக்கு உதவினர்.

மிகவும் கடுமையான வலி ஏற்படுத்தும் அளவிற்கு அவர் கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வழியாக சென்றவர்களும் கீழே விழுந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. SCDF அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால், இறுதியாக SCDF அதிகாரிகளின் உதவி தேவைப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை: 130க்கும் மேற்பட்டோர் கைது