வாளை வைத்து பாட்டிலை துண்டாக்கும் காணொளி வெளியிட்ட ஆடவர் – நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு

Man who posted video of himself slicing bottle
Joel Ezekiel II/Facebook

ஆயுதத்துடன் இருக்கும் காணொளியை வெளியிட்ட ஆடவர் மீது இன்று (அக் 30) ​​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

49 வயதான சிங்கப்பூரர் ஜோயல் எசெக்கியல், கையில் சாமுராய் வாளுடன் பாட்டிலைத் துண்டாக்குவது போன்ற காணொளியை வெளியிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் – ஏற்பாடுகள் மும்முரம்

சட்டப்பூர்வ நோக்கமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எசேக்கியேல் ரிமாண்ட் செய்யப்பட்டு வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சாமுராய் வாளுடன் ஆடவர் இருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை பற்றி புகார் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

அதன் பின்னர் எசேக்கியேலை அடையாளம் கண்ட காவல்துறை, புகார் வந்த சில மணிநேரங்களில் யோர்க் ஹில்லில் உள்ள வீட்டில் அவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் நடந்த சோதனையில் வாள் தவிர மேலும் பல ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அவர் வீட்டில் போதைப்பொருள் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு