யூஷூனில் ஆடவரை கத்தியால் தாக்கிய இருவர் கைது

man slashed in Yishun
SPF

ஆபத்தான ஆயுதத்தை கொண்டு தானாக முன்வந்து காயப்படுத்திய வழக்கில் 39 வயது ஆண் மற்றும் 49 வயது பெண் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று அக்டோபர் 3 அன்று மாலை 5:30 மணியளவில் யூஷூன் அவென்யூ 6 2ல் ஆடவர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கட்டுமான தளத்தில் கொள்கலன் மேலே விழுந்ததில் ஊழியர் உடல் நசுங்கி மரணம்

இதில் அந்த ஆடவர் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டார் மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறை வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன், குற்றம் நடந்த நான்கு மணி நேரத்திற்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் கத்தி ஒன்று சாட்சியமாக மீட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் முன்னர் தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், 39 வயதான ஆடவர் மீது நாளை அக். 5ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். மேலும், 49 வயதான பெண் மீது விசாரணைகள் தொடர்கின்றன.

முழு கண்காணிப்பில் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்