தலைக்கேறிய மது போதை.. வீட்டில் உறங்குவது போல படுத்திருந்த ஆடவர் – போலீசை அழைத்த பொதுமக்கள்

Stomp

தோ பாயோவில் உள்ள HDB ஹப்பில் ஆடவர் ஒருவர் தரையில் மட்ட மல்லாக்க படுத்திருப்பதைக் கண்டு யார் இவர் என அவ்வழியே சென்றவர்கள் கவலை அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்டாம்ப் வாசகர் ஜாரென் என்பவர், அந்த ஆடவர் மற்றும் துணை மருத்துவர்களின் புகைப்படங்களை ஸ்டாம்ப்-உடன் பகிர்ந்து கொண்டார்.

அங் மோ கியோவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் – சிதைந்து துர்நாற்றம் வீசிய பரிதாபம்

ஆடவர் தரையில் படுத்த நிலையில் கிடப்பதை பார்த்ததாகவும், உடனே காவல்துறைக்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் ஜாரென் கூறினார்.

அந்த ஆடவர் கீழே ஏதும் விழவில்லை என்பதை உறுதி செய்த அவர், சாதாரணமாக படுத்திருந்தார் என்றும் குறிப்பிட்டார்.

Stomp

மேலும், ஆடவர் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே மது அருந்தியிருப்பதையும் வாசகர் புரிந்துகொண்டார்.

இருப்பினும், காவல்துறைக்கு அவர் ஒத்துழைப்பு அளித்ததாகவும், எந்த குற்றமும் அவர் செய்யவில்லை என்றும் ஜாரென் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 27 அன்று இரவு 8 மணியளவில், 530 லோராங் 6 தோ பாயோ என்ற முகவரியில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக ஸ்டாம்ப் கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து, தலா S$500 கமிஷனுக்கு மலேசியா அனுப்பிவைத்த ஏஜென்சி பெண்