சிங்கப்பூர் Esplanade டிரைவில், ஆடவர் ஒருவரை குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைக்கும் ஒரு பரபரப்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
Mothership பகிர்ந்துள்ள அந்த காணொளியில், ஆறு அதிகாரிகள் சாலையின் நடுவில் வெள்ளை சட்டை அணிந்த ஆடவரை நோக்கி முன்னேறுவதை காணமுடிகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிய தொழில்முனைவோருக்கான மானிய ஆதரவு S$50,000ஆக உயர்வு..!
அந்த ஆடவர் ஏதோ வாக்குவாதம் செய்து அதிகாரிகளை நோக்கி செல்வது போன்று காணொளியில் தெரிகிறது.
பின்னர், அந்த ஆடவரை தற்காலிகமாக இயலாமல் செய்வதற்காக Taser வைத்து அதிகாரி ஒருவர் சுடுவதையும் காணொளியில் காணமுடிகிறது, அதன் பின்னர் அவர் தரையில் விழுவதையும் காணமுடிகிறது.
அதனை தொடர்ந்து, அதிகாரிகள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, அந்த ஆடவர் அவர்களை விலக்கி அதிகாரி ஒருவரை தாக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
அதன் பின்னர், அவர் தனது சட்டையை கழற்றி எறிந்து, Taser முனைகளை அகற்றி தப்பித்து செல்கிறார். அவரை, நான்கு அதிகாரிகள் துரத்தும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. புதுப்பிப்புக்கு தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடை மாற்றம் செய்த ஊழியர்கள் புதிய வேலைகளை பெற்றுள்ளனர் – MOM..!