பொங்கோலில் உள்ள HDB வீட்டின் ஜன்னல் வழியே சைக்கிள், மைக்ரோவேவ் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை தூக்கி எறிந்ததாக 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொங்கோலில் உள்ள 223A சுமங் லேனில் நேற்று முன்தினம் அக்.6 அன்று அதிகாலை 5 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது என ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
அதிகாலை 5 மணியளவில் ஏதோ பொருட்கள் தரையில் விழுந்து சத்தம் கேட்டதாக அதே பிளாக்கில் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் ஷின் மின்னிடம் கூறினார்.
பின்னர் ஜன்னல் வழியே பார்த்தபோது, தரையின் கீழே ஒரு சைக்கிள், பானை, கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சைக்கிள், மைக்ரோவேவ் மற்றும் தொலைக்காட்சி பெட்டியையும் அந்த ஆடவர் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இதில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் இன்றும் புகைமூட்டம் தொடரும்.. ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய PSI குறியீடு