கையில் ஆயுதத்துடன் போற வழியில் 7 பேரைத் தாக்கிய ஆடவர் – வளைத்துப் பிடித்த பொதுமக்கள்

Singapore:

Singapore: 6 வயதுச் சிறுமி உட்பட 7 பேரைத் தாக்கியதாகக் கூறப்படும் 20 வயது ஆடவர் ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

அந்த ஆடவர் பெரிய கத்தி ஒன்றும், இன்னொரு கத்தியும் மற்றும் கைகளாலும் பாதிக்கப்பட்டவர்களை தாக்கி காயப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

பிக் டிக்கெட் லாட்டரியில் பிரம்மாண்ட பரிசை வென்ற இந்தியர் – இந்திய மதிப்பில் 34 கோடி

பிப்ரவரி 3 அன்று நடந்த இந்த சம்பவத்தில், மார்கரெட் டிரைவ் உணவங்காடி நிலையத்தின் அருகில் 45 வயது சீனப் பெண்ணை அந்த ஆடவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சீனப் பெண் உதவிக்காக காவல்துறையை அழைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பின்னர், அருகிலுள்ள கூட்டுரிமை வீட்டு பிளாக்கின் முதல் மாடி லிப்ட் லாபியில் இருவரை அவர் தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

மார்கரெட் டிரைவ் பகுதியிலிருந்து Queens Peak கூட்டுரிமை வீட்டின் பகுதி வரை சென்ற அவர், சுமார் 7 பேரை தாக்கியுள்ளார்.

இதில் 40 வயது, 76 வயதுமிக்க ஆடவர் இருவர் மற்றும் 6 வயது சிறுமி ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

45 வயது பெண் உட்பட மேலும் மூன்று ஆடவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படவில்லை.

சடலமாக கிடந்த 28 வயதுமிக்க இளைஞர்