சடலமாக கிடந்த 28 வயதுமிக்க இளைஞர்

unnatural-death-owen-road
Shin Min Daily News

சிங்கப்பூர்: 28 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் பிப்ரவரி 3ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

பிளாக் 47 ஓவன் ரோடு குடியிருப்பில் உள்ள அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக வாசகர்கள் ஷின் மின் டெய்லி நியூஸிடம் தெரிவித்தனர்.

வேலையை இழந்த ஊழியர்கள் வேறு வேலை தேட உதவி – ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்கு ஆதரவு

பின்னர் இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்த புகார் கிடைத்ததாக ஷின் மின்னிடம் பேசிய போலீசார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, அன்று மாலை 5:30 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது. ஆனால் அவர்களின் உதவி தேவைப்படவில்லை.

இது குறித்து பக்கத்து வீட்டு முதியவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்த இளைஞர் உயரமானவர் என்றும், நன்கு கட்டுடல் கொண்டவர் என்றும் கூறினார்.

அவர் அங்கு இரண்டு வருடங்களாக வசித்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

இறந்த இளைஞர் தனது தந்தையுடன் வசித்து வந்ததாக நம்பப்படும் நிலையில், எட்டு மாதங்களாக தந்தையை நான் பார்க்கவில்லை என்று அண்டை வீட்டார் பகிர்ந்து கொண்டனர்.

அந்த இளைஞரின் தாய் சோவா சூ காங்கில் வசித்து வருவதாகவும், ஒரு வேளை அவரின் தந்தை அவருடன் தங்கி இருக்கலாம் என்றும் அண்டை வீட்டார் ஊகித்து கூறினார்.

ஊழியர்களுக்காக துணை நிற்கும் சிங்கப்பூர் அரசாங்கம்.. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையாகும் விதிகள் – 2024 ஏப். 1 முதல் கட்டாயம்