பிளாக் 506 ஹவ்காங் அவென்யூ – 8இல் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய COVID-19 சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பாதித்த நபர்கள் சிலர் அங்கு குடியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக ஆடவர் மரணம்
அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை MOH குறிப்பிடவில்லை.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறிய அமைச்சகம், இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி, இரண்டு நாட்களில் குடியிருப்பாளர்களுக்கு பிளாக் வெற்றுத் தளத்தில் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்துள்ளோம் என்றும், மேலும் அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவோம் என்றும் அது கூறியுள்ளது.
அங்கு வசிப்பவர்களும் தங்கள் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 கி.மீ துரத்தி சென்று வெளிநாட்டு ஊழியரிடம் S$2 பணத்தை ஒப்படைத்த ஆடவர் – மெய்சிலிர்க்க வைத்த பதிவு