மார்கழி மாதத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூஜை நேரங்கள் அறிவிப்பு!

Photo: Sri Mariamman Temple

 

மார்கழி மாதத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், பூஜை நேரங்களை இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் புதிய மாதிரி விடுதி அறை.. சோதனைக்காக தங்கிய ஊழியர்கள் – அங்கிருக்கும் வேற லெவல் சிறப்புகள் என்ன?

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், டிசம்பர் 17- ஆம் தேதி முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை மார்கழி மாத பூஜை நடைபெறவுள்ளது.

மார்கழி மாதம் முழுவதும் வாரத்தில் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 05.00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, காலை 05.15 மணிக்கு அபிஷேகமும், காலை 05.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், காலை 07.00 மணிக்கு காலசந்தி அபிஷேகமும், காலை 07.45 மணிக்கு காலசந்தி பூஜையும், காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், காலை 05.00 மணிக்கு அபிஷேகமும், மாலை 06.00 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 08.45 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் (வெள்ளிக்கிழமைத் தவிர) நடைபெறும்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்

அர்ச்சனை சேவைகள் காலை 11.00 மணி மற்றும் இரவு 08.15 மணிக்கு முடிவடையும். எனினும், வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை சேவைகள் இரவு 08.45 மணிக்கும், அர்த்தஜாம பூஜை இரவு 09.15 மணிக்கும் முடிவடையும். சிறப்பு நிகழ்வு நாட்களில் கோயில் மூடும் நேரம் மாற்றங்களுக்கு உட்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.