வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.
AC பழுதுபார்ப்பு வேலைக்காக சென்ற அவர், அந்த வீட்டில் இருந்த 8 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் முடிவு – MOM அப்டேட்
அதோடு மட்டும் இல்லாமல், உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல், தங்கும் விடுதியிலும் இருக்காமல் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ஊழியர்.
அங்கு சென்ற அவர், சிறுமியை படிக்கட்டுக்கு அழைத்து வந்து மீண்டும் மானபங்கம் செய்துள்ளார். பின்னர் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை அவர் கைப்பேசி மூலம் படப்பிடித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மொல்லா சோஹிடூல் என்ற பங்களாதேஸ் நாட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறையும் எட்டு பிரம்படியும் விதிக்கப்பட்டது.
மொல்லா தங்கியிருந்த விடுதியின் பெயர், சிறுமியின் பெயர் ஆகியவை பாதுகாப்பு அம்சம் கருதி நீதிமன்றம் வெளியிடவில்லை.
சிறுமி இது குறித்து ஒன்றும் அறியாத காரணத்தால் இதை யாரிடமும் சொல்லவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதே போல மீண்டும் ஒரு முறை சிறுமியை படிக்கட்டுக்கு வரச்சொல்லி பாலியல் சீண்டல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த சிறுமி இரும்பு கேட்டை மூடிவிட்டு செல்வதை கவனித்த அந்த வீட்டின் பணிப்பெண் என்ன என விசாரித்துள்ளார்.
அதன் பின்னர் இந்த உண்மைகள் வெளிவந்தது. பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு மொல்லா 2022 ஆம் ஆண்டு மே 6 அன்று கைது செய்யப்பட்டார்.