சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் முடிவு – MOM அப்டேட்

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மனிதவள அமைச்கம் (MOM) அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெறும் S$1க்கு டிக்கெட் வாங்கி S$4.469 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற நபர்

அதன்படி, சுமார் 32.6 சதவீத நிறுவனங்கள் 2024 இன் முதல் மூன்று மாதங்களில் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தைக் கொண்டுள்ளன.

2023 செப்டம்பர் மாதத்தில், இது 18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல, சுமார் 47.7 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன.

இது 2023 செப்டம்பர் மாதத்தில், 42.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை

கடந்த 2023 ஆண்டு வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக கட்டுமானம், உற்பத்தி, நிதித் துறை போன்ற வேலைகளில் அதிக வெளிநாட்டு ஊழியர்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான ஆறு காலாண்டுகள் சரிவுக்குப் பிறகு, 2023 டிசம்பரில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 79,800 ஆக சற்று அதிகரித்தது.

வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் அதிகரிப்பு.. “எப்படி சமாளிப்போம்” – சிறிய நிறுவனங்கள் கவலை

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெறும் S$1க்கு டிக்கெட் வாங்கி S$4.469 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற நபர்