சுமார் 165 வெளிநாட்டு ஊழியர்கள் ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களுக்கு நேற்று (டிசம்பர் 28) சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரி திரு குமரன் பெரியசாமி வெளிநாட்டு ஊழியர்களுடன் கலந்து கொண்டார்.
சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை ஆதரிக்கும் சமூக தொண்டூழிய அமைப்பான Itsrainingraincoats இதை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப்பயணம் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம், பான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் முன்னாள் மாணவர்கள் IIMALUMNI.sg மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் அது ஏற்பாடு செய்யப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
திரு குமரன் பெரியசாமி, வெளிநாட்டு ஊழியர்கள் சிலருடன் உரையாடி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து, புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதான எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கம்!
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…