சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; மினிபஸ் ஓட்டுநர் கைது..!

Minibus driver arrested after motorcyclist killed
The driver of a minibus was arrested after a motorcyclist was killed in an accident early Tuesday morning (Mar 3). (Photo: Watson Wong)

சிங்கப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை (மார்ச் 3) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இதனை அடுத்து இந்த சம்பவத்தில் மினி பஸ் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் உட்பட மேலும் இருவருக்கு COVID-19 தொற்று உறுதி..!

வெஸ்ட் கோஸ்ட் சாலை மற்றும் கிளெமென்டி அவென்யூ 2 சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது. இது குறித்து அதிகாலை 5.30 மணியளவில் போலீசார் எச்சரிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய 24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அசைவில்லாமல் இருந்த சூழலில், அவர் துணை மருத்துவரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக 62 வயதான மினி பஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் தொற்று இல்லை; சிங்கப்பூரில் RI வகுப்புகள் மீண்டும் தொடக்கம்..!

இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம், காலை 7.10 மணியளவில் ஒரு ட்வீட்டில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்