சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry Of Defence, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Minister for Defence Dr Ng Eng Hen) மே 12- ஆம் தேதி முதல் மே 17- ஆம் தேதி வரை எஸ்டோனியா (Estonia), லாட்வியா (Latvia) ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பயங்கர தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவனையில்…
எஸ்டோனியா நாட்டின் தலைநகரான தாலினில் (Tallinn) தலைவர்களைச் சந்திக்கவிருக்கும் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர், 15- வது லெனார்ட் மெரி மாநாட்டில் (15th Lennart Meri Conference) உரையாற்றவிருக்கிறார். லெனார்ட் மெரி மாநாடு என்பது எஸ்டோனியாவில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை மாநாடாகும். இந்த மாநாடு கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
“புதிய தொற்று அலைக்கான எந்த ஆதாரமும் இல்லை” – சுகாதார அமைச்சர் ஓங்
இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்றிணைக்கிறது. அதேபோல், லாட்வியா தலைநகர் ரிகாவில் (Riga) அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.